தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் திறந்துவைக்க ஏற்பாடு..!!
Read Time:1 Minute, 10 Second
தமிழ்நாடு, தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழகை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
உயிர் தியாகம் செய்த, அந்த தமிழர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், நினைவுச்சின்னம், தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைக்கப்படுகிறது.
நினைவுச்சின்னம் அருகில், தமிழ் அன்னை சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது.
நினைவுச்சின்னத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான இயக்கத்தின் சார்பில் அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating