உளவு பார்த்ததென்ற சந்தேகத்தில் எகிப்து பொலிஸ் பறவை தடுத்து வைப்பு..!!

Read Time:2 Minute, 14 Second

1907Egypt-3பற­வை­யொன்று உளவு பார்த்­தலில் ஈடு­பட்­டி­ருந்­தது என்ற சந்­தே­கத்தில் எகிப்­திய பொலி­ஸா­ரினால் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது.

எகிப்தின் தலை­நகர் கெய்­ரோ­வி­லி­ருந்து 280 மைல் தொலை­வி­லுள்ள குவேனா பிராந்­தி­யத்­தி­லுள்ள பொலிஸ் நிலை­ய­மொன்­றுக்கு இப்­ப­ற­வையை நபர் ஒருவர் கொண்­டு­வந்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வெளி­நாட்­டி­லி­ருந்த வந்த இப்­ப­ற­வையின் உடலில் இலத்­தி­ர­னியல் கரு­வி­யொ­ருன்று பொருத்­தப்­பட்­டி­ருப்­பதால் அது உளவு பார்ப்­ப­தற்கு பயன்­ப­டுத்­த­பட்­டி­ருக்­கலாம் என சந்­தேகம் எழுந்­த­மையே இதற்குக் காரணம். அதை­ய­டுத்து பொலிஸ் நிலை­யத்­தி­லுள்ள கூண்டில் அப்­ப­ற­வையை தடுத்­து­வைப்­ப­தற்கு அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர்.

பற­வையின் உடலில் இருந்த கரு­வியை ஆராய்ந்த அதி­கா­ரிகள், அது வெடி­பொ­ருளோ அல்­லது உளவு கரு­வியோ அல்ல எனத் தெரி­வித்­துள்­ளனர். மாறாக, பற­வையின் நட­மாட்­டத்தை கண்­கா­ணிப்­ப­தற்­காக பொருத்­தப்­பட்ட ஒரு கரு­வி­யாக அது இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

எகிப்தில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லையில் அந்­நிய நபர்கள், பொருட்கள் தொடர்பில் அதி­கா­ரி­களும் மக்­களும் எச்­ச­ரிக்­கை­யாக உள்­ளனர்.

முன்னாள்  ஜனா­தி­பதி முர்­ஸியின் ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 900 பொதுமக்களும் 100 சிப்பாய்கள், பொலிஸாரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுறாக்களுடன் நீந்தும் பெண்..!!
Next post பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடித்து ராணுவவீரர்கள் 9 பேர் பலி..!!