உளவு பார்த்ததென்ற சந்தேகத்தில் எகிப்து பொலிஸ் பறவை தடுத்து வைப்பு..!!
பறவையொன்று உளவு பார்த்தலில் ஈடுபட்டிருந்தது என்ற சந்தேகத்தில் எகிப்திய பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது
எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து 280 மைல் தொலைவிலுள்ள குவேனா பிராந்தியத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு இப்பறவையை நபர் ஒருவர் கொண்டுவந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்த வந்த இப்பறவையின் உடலில் இலத்திரனியல் கருவியொருன்று பொருத்தப்பட்டிருப்பதால் அது உளவு பார்ப்பதற்கு பயன்படுத்தபட்டிருக்கலா
பறவையின் உடலில் இருந்த கருவியை ஆராய்ந்த அதிகாரிகள், அது வெடிபொருளோ அல்லது உளவு கருவியோ அல்ல எனத் தெரிவித்துள்ளனர். மாறாக, பறவையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட ஒரு கருவியாக அது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
எகிப்தில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்நிய நபர்கள், பொருட்கள் தொடர்பில் அதிகாரிகளும் மக்களும் எச்சரிக்கையாக உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 900 பொதுமக்களும் 100 சிப்பாய்கள், பொலிஸாரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating