பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடித்து ராணுவவீரர்கள் 9 பேர் பலி..!!
பாகிஸ்தானின் வடக்குப்பகுதியில் வசிரிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. ஆப்கான் எல்லையோர மலைப்பகுதிகளான இங்கு தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் ,ருக்கும் என்று கூறப்படுகிறது.
இவர்கள் இங்கு மறைந்துகொண்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இப்பகுதி வழியே ,ன்று ராணுவ வாகனங்கள் கடந்துசென்றபோது சாலையோரம் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இதில் ராணுவ வீரர்க்ள் 9 பேர் கொல்லப்பட்டனர். 21 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இப்பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுப்பட்டுவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களின் மீது அமெரிக்கா ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த தாக்குதலில் கூட 3 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating