போதைப் பொருள் விசாரணைக்கென பாகிஸ்தான் பொலிஸார் வருகை..!!
Read Time:50 Second
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாகிஸ்தான் பொலிஸார் இலங்கை வரவுள்ளனர்.
அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இந்தப் போதைப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
உலகப் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரின் ஒத்துழைப்புடன் இந்த போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating