வடமராட்சியில் கூட்டமைப்பின் கொடிகள் பொலிஸாரால் அகற்றல்..!!

Read Time:1 Minute, 33 Second

images (2)தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக வடமராட்சி மாலி சந்தி, மைக்கல் விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட கொடிகள் பொலிஸாரால் நேற்று மாலை அகற்றப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மைக்கல் விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டது. இதற்கென மைதானம் கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதனை அறிந்த நெல்லியடிப் பொலிஸார் மைதானத்துக்கு வந்து கட்டப்பட்ட கொடிகளை அகற்றுமாறு ஏற்பாட்டாளர்களுக்கு பணித்துள்ளனர். இதனால் இருபகுதிக்கும் இடை யில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதனை அடுத்து பொலிஸாரே கொடிகளை அகற்றினர்.

வடமராட்சிப் பகுதியில் அரச கட்சிகளின் கொடிகள் பரவலாக கட்டப்பட்டு பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் இது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காது கூட்டமைப்பு கொடியை மாத் திரம் கழற்றியது பாரபட்சமானது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீலப்படங்களை காட்டுவதாக அநாமதேய முறைப்பாடு..!!
Next post மாணவிகளின் அந்தரங்கங்களை படம்பிடித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்..!!