பாடசாலையில் அனுமதிக்க பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் கைது..!!
Read Time:1 Minute, 27 Second
பாடசாலையில் பிள்ளையை அனுமதிக்கும் பொருட்டு தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபரொருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொட்டாவ ஆனந்த வித்தியாலயத்தின் அதிபரே இலஞ்ச ஒழிப்பு ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தரம் 1 இல் பிள்ளை அனுமதிக்கும் பொருட்டு குறித்த சந்தேக நபர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதுடன் பிரதேசத்தில் உள்ள ஹோட்டலொன்றுக்கு வருமாறு பிள்ளையில் தாய்க்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஊழல் ஆணைக்குழுவுக்கு அப் பெண் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தினத்தன்று அப்பெண் ஹோட்டலுக்கு சென்றுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் பாலியல் இலஞ்சம் பெறுவதற்காக காத்திருந்த போது இலஞ்ச ஒழிப்பு ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Average Rating