கணவர் திடீர் கைது.. ஷார்ஜாவில் 3 குழந்தைகளுடன் தவிக்கும் பெண்..!!
ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துவிட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார்.
தமிழகம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர் நம்பர் பிளேட் வாங்கிய நிறுவனத்தில் கொடுத்த செக்யூரிட்டி செக்கை வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.
கணவர் கைதாகி விட்டதால் அவரது மனைவி சுந்தரி தனது 3 குழந்தைகளுடன் நட்டாற்றில் விடப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியிலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலும் அவர் தவித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நன்றாக படித்து வருவதால் பள்ளி நிர்வாகமே இவரது கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகிறது.
உணவுக்காக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி வருகின்றனர்.இந்தப் பெண்ணுக்கு உணவுப் பொருட்களோ அல்லது பிற உதவிகளோ செய்ய விரும்புவோர் 055 524 8000, 055 53 89 276 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating