ஐ.நா தலைமையகம் முன்பாக இலங்கை இளைஞர் தீ மூட்டி தற்கொலை..!!

Read Time:1 Minute, 51 Second
images (2)ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு முன்னால், இலங்கையர் ஒருவர் தமக்கு தாமே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டின் நேரப்படி, நேற்று மாலை 4.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதன் போது சில ஈராக்கைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

அவர்களால் குறித்த இலங்கையிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரிடம் இருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள் சிலமீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்து, விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்களாலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தின் முதல் அரவாணி மல்யுத்த வீராங்கனை..!!
Next post ஈராக்கில் ஷியா குடும்பத்தினர் மீது தாக்கு: 16 பேர் பலி..!!