ஒன்றாக மது அருந்திய நிலையில் நண்பனை குத்திக்கொன்றவன்..!!
Read Time:1 Minute, 18 Second
ஒன்றாக மதுவருந்திய நண்பர்கள் போதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு ஒருவர் மற்றவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவமொன்று கடந்த முதலாம் திகதி இரவு களனி திப்பிட்டிகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
தெல்தெனிய ரங்கல பிரதேசத்தைச் சேர்ந்த முனுசாமி ராஜகோபால் என்ற 33 வயதான இளைஞரே உயிரிழந்தவராவார்.
களனிய திப்பிட்டிகொட என்ற இடத்தில் தற்காலிகமாக தனித் தனி அறைகளில் தங்கியிருந்த இவ்விருவரும் கடந்த முதலாம் திகதி இரவு மது அருந்தியுள்ளனர்.
பின்னர் இருவருக்கிடையிலும் ஏதோவொரு விடயத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தியதாக தெரிய வந்துள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating