கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரையின்போது பொலீசார் அடாவடி..!!
Read Time:1 Minute, 38 Second
வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைகள் இன்று இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரப் பணிகளில் இன்றுமாலை ஈடுபட்டிருந்தனர்.
மாலை 4மணியளவில் தோணிக்கல் மாடசாமி கோவிலடிப் பகுதியில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது திடீரென அவ்விடத்திற்கு வந்த சமரக்கோன் என்கின்ற வவுனியா பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர், இப்பகுதிகளில் நீங்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட இயலாது என்று தெரிவித்து வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஆதரவாளர்களையும், நண்பர்களையும் மிரட்டி, அவர்கள் தம்வசம் வைத்திருந்த பிரசுரங்களையும் பறித்ததுடன், தொடர்ந்து நீங்கள் இப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் வாக்குரிமையையும் இழக்கும் நிலை ஏற்படுமென்று எச்சரித்தும் சென்றுள்ளனர்.
Average Rating