ஆட்கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி கைது..!!

Read Time:1 Minute, 13 Second

images (3)சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் இலங்கையர்கள் அனுப்பிவந்த குற்றச்சாட்டின் கீழ், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் கடற்படையைச் சேர்ந்த லப்டின் கொமாண்டர் தர அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை குற்றப் புலனாய்வு தரப்பினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதான கடற்படை அதிகாரி திருகோணமலை கடற்படை முகாமைச் சேர்ந்தவர் என்ற தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இன்று மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படைத்தரப்பினருக்கு சிறை தண்டனை..!!
Next post குறைவான நேரம் உறங்கும் அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும்..!!