கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் மாயம்..!!
Read Time:55 Second
மாத்தறை மாவட்டம் கந்தர, தலல்ல பிரதேச கடற்பரப்பில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற்போயுள்ளார்.
இரு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளதாக கந்தர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு நேற்று பிற்பகல் காணாமற்போயுள்ளார்.
கந்தர பொலிஸார் மற்றும் கடற்படை இணைந்து காணாமற்போன இளைஞனை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating