புகலிட கோரிக்கையாளர் விடயத்தில் உரிய நடவடிக்கை-டொனி அபோட்..!!
Read Time:1 Minute, 25 Second
புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டொனி அபோட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியை ஒப்புக்கொள்வதாக அக்கட்சியின் தலைவரான பிரதமர் கெவின் ரூட் அறிவித்துள்ளதையடுத்து புதிய பிரதமராக டொனி அபோட் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், தனது தலையாய கடமைகள் இரண்டு எனவும், ஒன்று முந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கார்பன் வரியை நீக்குவதா, இல்லையா என்று முடிவெடுக்கவேண்டும்.
மற்றது ஆசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து புகலிடம் தேடி படகில் வருவோரின் பிரச்சினை. படகுகளில் வருவோரை கடல் என்லையிலேயே மறித்து திருப்பி அனுப்புவதுதான் சிறந்த முறையென்றும் கிறிஸ்மஸ் தீவு போன்ற மற்ற இடங்களுக்கு அனுப்புவதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating