அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியைத் தேடி வலைவீச்சு..!!
பொலநறுவை காலிங்க பிரதேசத்தில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சகோதரர்கள் இடையே நெல் அறுவடையை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறின் போது, கோபமடைந்த தம்பி பொல்லால் அண்ணனை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.
நேற்றுமாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, தம்பியை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். கொலைச் சம்பவம் குறித்து பொலன்நறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.