வெட்ட தயாராகவிருந்த 20 மாடுகள் மீட்பு: எழுவர் கைது..!!
Read Time:1 Minute, 0 Second
அனுராதபுரம், கெக்கிராவ, புளியங்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டும் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸார் நேற்றுமாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாடு வெட்டும் நிலையத்திலிருந்து வெட்டுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 20 மாடுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளில் கெக்கிராவ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating