வல்லுறவுகளுக்காக 1000 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தற்கொலை..!!

Read Time:2 Minute, 5 Second

1938arial2அமெரிக்காவில் மூன்று பெண்களை கடத்தி தனது வீட்டில் அடைத்துவைத்து பல வருடங்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆயுட் கால தண்டனையுடன் மேலும் 1000 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஏரியல் கஸ்ட்ரோ எனும் நபர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காணாமல் போனதாக கருதப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் தப்பி வந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தன் மூலம் இப்பெண்கள் பலவருடங்களாக அடைத்து வைக்கப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை தெரியவந்தது.

இச்சம்பவம் அமெரிக்கா முழவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 53 வயதான ஏரியல் கஸ்ட்ரோ குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். ஆதையடுத்து அவருக்கு ஆயட்காலத் தண்டனையுடன் மேலும் 1000 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உலகில் மிக நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஏரியல் கஸ்ட்ரோ ஒருமாத காலம் சிறைத்தண்டனையை அனுபவித்த நிலையில் இறந்துள்ளார்.

ஒஹையோ மாநிலத்தலுள்ள சிறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட கூண்டொன்றில் வைக்கப்பட்டிருந்தார்.

அரைமணித்தியாலத்துக்கு ஒரு தடவை அவரின் சிறைக்கூண்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு வந்தது. ஏனினும் உள்ளூர் நேரப்படி செவ்வாய் இரவு 9.20 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிவ் யுன்ஷான் இலங்கைக்கு விஜயம்…!!
Next post முள்ளிவாய்க்காலில் நிற்கும் ஜோர்தான் கப்பலை உடைக்கும் பணி ஆரம்பம்..!!