வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயம்..!!

Read Time:1 Minute, 17 Second

download (26)மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமாலை 6 மணியளவில் நடந்த இந்த வாள்வெட்டு சம்பவத்தில் சங்கானையைச் சேர்ந்த குணதீபன் என்பவரே காயமடைந்தவராவார்.

யாழ். மானிப்பாய் ஆனந்தம் வைரவர் கோயிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் மேசன் வேலை செய்த இவர் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது முகத்தை துணியால் மறைத்துக் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

காயமடைந்து மயக்க நிலையில் கிடந்த இளைஞரை அப்பகுதி மக்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முள்ளிவாய்க்காலில் நிற்கும் ஜோர்தான் கப்பலை உடைக்கும் பணி ஆரம்பம்..!!
Next post பைக்கிள் சென்றுகொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கைது..!!