முதலீட்டாளர்களை கவரும் மாநாடு ஹொங்கொங்கில்..!!
Read Time:1 Minute, 23 Second
கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 இலங்கை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத் துறை அதிகாரிகள் இன்று ஹொங்கொங்கில் சந்திப்பொன்றை மேற்கொள்கின்றனர்.
ஹொங்கொங்கில் இன்று நடைபெறும் இந்த மாநாட்டினை இலங்கை கடனீட்டு ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும், கொழும்பு பங்குச் சந்தையும் ஏற்பாடு செய்துள்ளன.
இன்றைய மாநாட்டில் நூற்றுக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டு;ள்ளது.
இதன்மூலம் அதிக அளவிலான ஹொங்கொங் முதலீட்டாளர்களை கவர முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா ஆகியோர் தமது ஆக்கங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating