அனந்தி எழிலனின் வாகனம் மீது தாக்குதல்
வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், புலிகளின் பொறுப்பாளர்களுள் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாதோர் கற்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று யாழ்.நகரப்பகுதி, மாதகல், சுன்னாகம், கொக்குவில் ஆகிய பகுதிகளில் பிரசாரக் கூட்டங்களை நிறைவு செய்து கொண்டு சுழிபுரம்- வழக்கம்பரையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது யாழ். நகரத்தை அண்டியுள்ள ஐந்துசந்தி பகுதியில், 9.45மணியளவில் இராணுவ வாகனம் ஒன்று பின்தொடர்ந்து வந்துள்ளது.
அந்த வாகனம் அனந்தி பயணித்த வாகனத்தை கடந்துசென்ற சில நிமிடங்களில் திடீரென பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாரிய கற்களை அனந்தியின் இருக்கையை நோக்கி வீசியுள்ளது. எனினும் அவர் சுதாகரித்துக் கொண்ட நிலையில் காயங்கள் இன்றி தப்பித்துள்ளார்.
தாக்குதலின் பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்ற நிலையில் அனந்தி பாதுகாப்பாக வீடு சென்றுள்ளார். எனினும் கற்கள் வீசப்பட்டத்தில் வாகனம் சிறிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
Average Rating