ஐதேக பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

Read Time:2 Minute, 3 Second

fight.facilitationகேகாலை மாவட்டம் பொத்தபிட்டிய – கிரிமெட்டிய பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் உத்திக பதிரண தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நேற்று இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

தாக்குதலின்போது காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் உத்திக பதிரண சிகிச்சைகளுக்காக கடுவன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் நிகால் குணசேகரவிற்கு ஆரவு தெரிவித்து சென்றவேளையில் உத்திக பதிரண தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளார்.

வாகனங்கள் பலவற்றில் வந்த 40 பேர் அடங்கிய இளைஞர்கள் குழு பிரதேச சபை உறுப்பினர் உத்திக பதிரணவை தாக்கியதுடன் அவரது வாகனத்திற்கும் சேதம் விளைவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் நிகால் குணசேகர தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரது ஆதரவாளர்களே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நிகால் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரது பதாதைகளை ஒட்டிக் கொண்டிருந்த ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள ஏற்பாடு
Next post தேர்தல் நீதியாக நடக்க வேண்டும் அவுஸ்திரேலிய விருப்பம் -யாழ்.ஆயர்