பொதுநலவாய தேர்தல் பார்வையாளர்கள் இலங்கை செல்வர்; கமலேஸ்

Read Time:1 Minute, 32 Second

comm.chogmஇலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க பொதுநலவாய நாடுகளின் பார்வையாளர்கள் அங்கு செல்லவுள்ளதாக பொதுநலவாய அமையத்தின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார்.

அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ முஸ்யோகா இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் தேர்தல் நடைமுறைகளுக்குள் நடக்கின்றனவா என்பதை இந்த பார்வையாளர் குழு பார்வையிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண முன்னாள் தேர்தல் அதிகாரியான ஜென்னி மக்முல்லன், பங்களாதேஷின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டாக்டர். சம்சுல் குடா மற்றும் செயிண்ட் லூசியாவின், கரீபியன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைப்பின் செயலர் எஸ்ஸமின் பில்பேர்ட் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் நீதியாக நடக்க வேண்டும் அவுஸ்திரேலிய விருப்பம் -யாழ்.ஆயர்
Next post இந்தோனேசியாவில் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி (PHOTOS)