நாமே வடக்கு கிழக்கு அபிவிருத்திகளுக்கு காரணம் -ரணில்
வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் தமது வேண்டுகோளுக்கு இணங்க டோக்கியோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடம்பெற்று வருவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் ,வ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தினர் தொடருந்து பாதைகளையோ பெருந்தெருக்களைக் காட்டி அபிவிருத்தி என்று கூறுகிறார்கள். இதற்கான நிதிகளை பெற்றுக்கொடுத்தது நான் தான்.
2003 ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டின் போது, யுத்தம் இடம்பெற்ற காரணத்தினால் வடக்கு கிழக்கு வடமத்திய மாகாணங்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகியிருந்தன,
அதனை புனரமைக்க எமக்கு நிதி தேவையென சுட்டிக்காட்டியிருந்தேன். அதில் பங்கேற்ற நாடுகள் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நிதி வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தனர்.
அந்த நிதியே தற்போது கிடைத்து வருகின்றது. இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திக்கு நானே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating