விண்வெளி மையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
Read Time:1 Minute, 2 Second
விண்வெளியில் 15 நாடுகள் இணைந்து 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சம் கோடி) செலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபடுவதும், நாடு திரும்புவதுமாக இருந்து வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷிய விண்வெளி வீரர்கள் பவல் வினோக்ராதோவ், அலெக்சாண்டர் மிசுர்கின், அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டோபர் கேஸ்சிடி ஆகியோர் 166 நாட்கள் தங்கி பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்கள் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு சோயுஸ் விண்கலம் மூலமாக பூமிக்கு (கஜகஸ்தான்) திரும்பினர்.
Average Rating