76 ஆண்டுகளின் பின்னர் பிரம்மாண்டமான ஆகாயக்கப்பல் (PHOTOS)
எதிர்காலத்திற்கான வான் வழி போக்குவரத்துக்காக ஷெபலின் எனும் ஆகாயக்கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டது. ஹிண்டபேர்க் எனும் இந்த ஆகாயக்கப்பல் 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி விபத்துக்குள்ளாகி 36 பேர் உயிரிழந்ததையடுத்து ஆகாயக்கப்பலின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் சுமார் 76 ஆண்டுகளின் பின்னர் பிரம்மாண்டமான ஆகாயக்கப்பல் ஒன்றிளை விமான உற்பத்தியில் முன்னோடியான ஏரோஸ் நிறுவனமே உருவாக்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனம் ஆகாய போக்குவரத்தில் புதியதோர் புரட்சியினை மேற்கொண்டு புதுமையான தொழில்நுட்பத்தில் மூலம் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஆகாயக்கப்பல்களை விட இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஷப்பலின்ஸின் முதலாவது சந்ததியில் ஏற்பட்ட அனுபவங்களினால் அவ்வாறான பிரச்சினைகளை இதில் தவிர்க்கப்படும் எனவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கார்கோ விமானத்தின் மூன்றில் ஒரு பங்கு எரிபொருளே இதற்கு போதுமானது. இதனை நீர், தரை என விமான ஓடு பாதைகள் அற்ற இடம் ஆகியவற்றுடன் யுத்தம் மற்றும் அனர்த்த பிரதேசம் என எங்கும் தரையிறக்கலாம் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வழங்கிய 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 400 மில்லியன் ரூபா) செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பிரம்மாண்டமான ஆகாயக்கப்பல் விரைவில் முதலாவது தடவையாக பரீட்சார்த்தமாக பறக்கவிடப்படவுள்ளதாக ஏரோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Average Rating