நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு
Read Time:55 Second
பாகிஸ்தான் பலுசிஸ்தான் தலைவர் பக்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் சார்பில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் இராணுவ தலைமை தளபதியாக முஷாரப் இருந்த போது பலுசிஸ்தான் தலைவர் பக்டி இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தற்போது முஷாரப் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating