மாணவர்களை நிர்வாணத்துடன் புரள வைத்து கொடிய பகிடிவதை! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கொடூரம்..

Read Time:2 Minute, 22 Second

sex.womanபுதிய மாணவ, மாணவிகளை ஆற்றோரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்த சம்பவமொன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் ஏழு பேருக்கும், நான்கு மாணவிகளுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆரியதிலக விடுதியில் புதிய மாணவ, மாணவியரின் ஆடைகளைக் களைந்து, மலசல கூடத்தில் தரையில் புரட்டி மோசமாக இந்த சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை மோசமான வார்த்தைகளால் ஏசி மலசலகூடத்தில் ஊர்ந்து செல்லுமாறு மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

இக்கொடிய பகிடிவதை தொடர்பாக புதிய மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் உபவேந்தரோ, நிர்வாகமோ தீர்வை வழங்கவில்லை.

இதனால் மாணவர்கள் உயர் கல்வி அமைச்சரிடம் நேரில் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உடன் விசாரணை நடத்தி, குற்றமிழைத்தோரைப் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் பகிடிவதையை மேற்கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மாணவர்கள் மூவர் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி வீடுகளுக்குச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் கொள்கைகளையே கூட்டமைப்பு முன்வைத்துள்ளது: ஜனாதிபதி
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..