கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு!!

Read Time:1 Minute, 35 Second

TNA_logoதமிழ் தேசிய கூட்டமைப்பினால் வட மாகாண சபை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக சிலர் நீதிமன்றம் செல்ல தயாரவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் கொள்கை பிரகடனம் தொடர்பாக அரசாங்கம் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச அதிகாரியான வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், வடமாகாண ஆளுனர் அரசியல் கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளமை தொடர்பில் முறைபாடு ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 75 வயது மூதாட்டி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது
Next post “கூட்டமைப்பை சிதைக்க” யாழில் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்! -எஸ்.எஸ்.கணேந்திரன் (வாசகர் கருத்து)