விபசார நிலையத்தில் கைதானோர்க்கு விளக்கமறியல்
Read Time:1 Minute, 0 Second
கொழும்பு மருதானை பகுதியில் தங்குமிட விடுதி என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்தபோது, கைதான 14 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாணந்துறை வலான மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைதானவர்களில் 12 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, அவிசாவளை, கலேவெல, ஹூன்னஸ்கிரிய, கட்டுபொல மற்றும் பெலேன பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating