தேர்தல் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் விசமிகளால் அடித்துடைப்பு
யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் அவ்விடத்திற்கு வந்த இனம்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமாலை 5.30 மணியளவில் வடமராட்சி உடுத்துறை பாரதி சனசமூகநிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலே இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் கூட்டம் முடிவடைந்த நிலையில் அங்கு வந்த இனம் தெரியாத நபர்கள், கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு வேட்பாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்தார்.
குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கஜதீபன் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating