நுவரெலியா சென்.கிளயார் ஆற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
Read Time:1 Minute, 11 Second
நுவரெலியா திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்.கிளயார் ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
26 வயதுடைய பொன்ராமன் மகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சென்.கிளயார் டெவோன் பிரதேச திருமண வீடொன்றில் சமையல் வேலை செய்ய வந்த குறித்த நபர் இன்று (16) காலை ஆற்றில் நீராடச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டு கொட்டக்கலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating