கோட்டைக்கல்லாறு பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Read Time:1 Minute, 40 Second

batti.muthurமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுமாலை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் அருகில் உள்ள கொய்யா மரத்தில் இருந்தே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டைக்கல்லாறு முதலாம் வட்டாரம் பவான் வீதியைச் சேர்ந்த செ.கிரிசாந்த் (12) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சிக்கு பல ஆண்டுகளின் பின் மீண்டும் (வெடிக்காமல்) சென்ற யாழ்தேவி ரயில்
Next post இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய இலங்கையருக்கு விருது