பெண்ணை நிர்வாண படம்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம்
ஒரு குழந்தையின் தாயொருவரை அவரது சகோதரிக்கு வெளிநாடொன்றில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பலாத்காரமாக நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து அவரது கணவரிடம் காண்பிப்பதாகக் கூறி அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கரவண்டி சாரதியொருவரை ஹபராதுவ மற்றும் காலி பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் தேடி வருகின்றனர்.
இப் பெண் கடந்த 10 ஆம் திகதி காலியிலிருந்து பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது மகளுடன் வீட்டுக்கு வர ஹபராதுவ பலட்டுகஹா சந்தியில் நின்ற போது முச்சக்கர வண்டியொன்றில் வந்த 30 வயது மதிக்கத்தக்க முச்சக்கரவண்டி சாரதி தாயையும் மகளையும் அவர்களது வீடுவரை முச்சக்கரவண்டியில் அழைத்து வந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் வரும் போது தாயும் சாரதியும் சகஜமாக உரையாடிக் கொண்டு வந்துள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் அப் பெண் தனது சகோதரிக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத் தர முடியுமா என்று சாரதியிடம் கேட்டுள்ளார். வெளிநாட்டு வேலை பெற்றுத்தர முடியும் எனக்கூறிய சாரதி புதன்கிழமை காலி பஸ் நிலையத்துக்கு வரும்படி அப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதன்படி கடந்த 11ஆம் திகதி காலி பஸ் நிலையத்துக்கு வந்த பெண்ணை முச்சக்கரவண்டி சாரதி காலி தலீபே பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைதுச் சென்றுள்ளார். பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்ற சாரதி அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி ஆபாச படங்களையும் வீடியோவையும் காண்பித்துள்ளார். இதற்கிடையில் அப் பெண்ணை நிர்வாணப்புகைப்படம் எடுத்ததுடன் வீடியோவிலும் பதிவு செய்துள்ளார்.
தமது விருப்பத்துக்கு இணங்கா விட்டால் நிர்வாணப் படங்களை இணைய தளத்தில் வெளியிடுவதாகவும் அதை அவர்களது உறவினர்களுக்கும் பொலிஸ் சேவையிலுள்ள அவரது கணவருக்கும் அனுப்பி வைக்கப் போவதாகக் கூறி அப்பெண்ணை பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சாரதியைக் கைது செய்ய ஹபராதுவ மற்றும் காலி பொலிஸார் பல முனைகளில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating