வன்னித்தலைவர் எந்த நேரமும் பயங்கரவாத சிந்தனையை உடையவர் – கருணாஅம்மான்
தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாஅம்மான் நேற்றையதினம் லண்டன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலில் கிழக்கு மக்களிற்கு விடியல் கிடைக்கும்வரை வன்னிபுலிகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், அரசியல் நீரோட்டத்தில் கலந்துள்ள தமது அமைப்பு சக அரசியல் கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருவதாகவும். கிழக்கு மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட தமது வேலைத்திட்டங்கள் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது வன்னிக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன். அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளதுடன். வன்னித்தலைவருக்கு சமாதானத்தின் மீதோ அப்பாவி மக்கள் கொல்லப்படுவதுபற்றியோ அக்கறையில்லாதவர் என்றும் எந்த நேரமும் பயங்கரவாத சிந்தனையை உடையவர் ஆகையால்தான் சர்வதேச சமூகத்தாலும் வன்னிபுலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.