கடலில் மூழ்கிய உல்லாசப் கப்பல் ஒன்றரை வருடத்தின் பின்னர் மீட்பு!!
இத்தாலிய கடற்பரப்பில் கடந்த வருடம் மூழ்கிய கொஸ்டா கொன்கோர்டியா பயணிகள் கப்பல் 19 மணி நேர போராட்டத்தின் பின்னர் நேற்று மீட்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இத்தாலியின் டுகானி கடலில் கொஸ்டா கொன்கோர்டியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் அதில் பயணித்த 3229 பயணிகள்இ 1023 ஊழியர்களில் 32 பேர் பலியாகினர். இக்கப்பலே நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு திட்டத்தில் கடலின் கீழ் பாரிய தளம் ஒன்றினை அமைத்து கேபிள் மூலம் 290 மீற்றர் நீளமும் 114இ000 தொன் நிறையும் கொண்ட கப்பல் நிலைக்குத்தாக உயர்த்தப்பட்டுள்ளது.
12 மணித்தியாலங்களுக்குள் கப்ப லினை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் 19 மணித்தியா லங்களிலேயே உயர்த்தப்பட்டதாக கொன்கோர்டியோ கப்பல் திட்டத் தின் முகாமையாளர் பிரான்கோ தெரிவித்துள்ளார்.
இம்மீட்புப்பணியை அமெரிக்கா வின் டைடன் மற்றும் இத்தாலியின் மைக்கோ பெரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டுள்ளது.
மீட்புப்பணி சிறப்பாக முடிவடைந் ததும் பணியில் ஈடுபட்டிருந்த முகாமையாளர்இ தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி ஆர வாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Average Rating