உயரம் குறைந்த முன்னாள் புலி இயக்க உறுப்பினர் உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்

Read Time:1 Minute, 45 Second

ltte.wedபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் திருமண நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

இதன்போது 3 திருமணங்கள் நடைபெற்றதுடன் அவை முறையே இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க சமய சம்பிரதாயப்படி நடைபெற்றுள்ளது.

புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்து தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இதேபோல் சகோதர இனத்தவரான சிவில் பாதுகாப்பு படை வீரர் ஹர்ஷ நூவான் தனது காதலியான சுகந்தினியை சிங்கள முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

எனினும் இங்கு நடைபெற்ற மற்றுமொரு திருமணம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.

புலிகள் இயக்கத்தில் இருந்த மிகவும் உயரம் குறைந்த முன்னாள் உறுப்பினரான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலில் மூழ்கிய உல்லாசப் கப்பல் ஒன்றரை வருடத்தின் பின்னர் மீட்பு!!
Next post மட்டக்களப்பில் வாகன விபத்து; ஒருவர் பலி