குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்
ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜக்ஸா மிகவும் அனுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ரொக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது.
எப்சிலொன் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ரொக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது.
37 மில்லியன் டொலர் (சுமார் 4895 மில்லியன் ரூபா) மதிப்பிலான இந்த அதி நவீன ரொக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது தொலைநோக்கியை டெலஸ்கோப்பை எடுத்துச்சென்றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோமீற்றர் தூரத்தில் அந்த விட்டு ரொக்கெட் பிரிந்தது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-ஏ- தொலைநோக்கியானது வெள்ளி, செவ்வாய், வியாழன் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளி பற்றிய அரிய தகவல்களை தரும் என்று நம்பப்படுகிறது.
முன்பு அனுப்பப்பட்ட ரொக்கெட்டுகளை காட்டிலும் பாதியளவு எடையுள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த எப்சிலொன் ரொக்கெட்டை அனுப்ப 8 விஞ்ஞானிகள் மட்டுமே தேவைப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating