ஆட்டோக்களை கொள்ளையிட்ட இருவர் கைது
ஆட்டோ கொள்ளையுடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கைதான இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மோதரை மற்றும் கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிடப்பட்ட முச்சக்கர வண்டிகள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி 5 ஆட்டோவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மட்டக்குளிய மற்றும் தொடலங்க பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் நேற்றையதினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மேலதிகமாக 24 மணித்தியாலங்கள் விசாரணைக்காக அனுமதியளிக்கப்பட்டது.
இதன்படி இவர்கள் இருவரும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating