அநாதரவாக காணப்பட்ட மூன்று சிறுவர்கள்..
மூன்று பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து தொழிலுக்காக கொழும்பு சென்ற பெற்றோர்; பசி தாங்காத பிள்ளைகள் கதவை உடைத்து வெளியே வந்தனர்…
நுவரெலியா, பீட்று தோட்டத்தில் அநாதரவாக காணப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டு அப்பகுதி கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சிறுவர்களிடம் வினவியபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை தாயும் தந்தையும் தங்கள் மூவரையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கொழும்பிற்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும் தாங்கள் கதவை உடைத்துக் கொண்டு உணவுக்கு வழியில்லாமல் வீதியில் திரிந்ததாகவும் குறித்த சிறுவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் பெற்றோர் எங்கு சென்றுள்ளார்கள் என்பது இவர்களுக்கு தெரியவில்லை. எனவே இவர்களின் பெற்றோர் எங்கிருந்தாலும் நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றார்கள். இவர்களின் வயது முறையே 8,10,12 ஆகும்.
Average Rating