கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்
Read Time:1 Minute, 2 Second
மாத்தறை – ரன் தீவு என்ற இடத்தில் உள்ள பாலத்தில் இருந்து கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
கடல் கொந்தளிப்பாக காணப்பட்டால், அவர்கள் காப்பற்ற முடியாமல் போனதாக பிரதேசவாதிகள் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை பட்டுதா வீதியில் வசித்து வரும் 19 வயதான மொஹமட் அஸ்தான் மற்றும் காலி மயிட்டிபே பகுதியை சேர்ந்த கரிஷ்மா தேவதா ஆகியோரே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் கூறினார்.
இவர்களின் சடலங்களை மீட்க சுழியோடிகளின் உதவி கோரப்பட்டு, சடலங்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Average Rating