பயணச் சீட்டு வழங்காத நடத்துனருக்கு 2,500 ரூபா அபராதம்
Read Time:57 Second
பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத குற்றத்துக்காக கொழும்பு, நுகேகொடையிலிருந்து ஹெட்டியாவத்தை வழியில் போக்குவரத்தில் ஈடுபடும் 176 ஆம் இலக்க பஸ்ஸின் நடத்துனருக்கு, நுகேகொட நீதிவான் அஜித் எம் மாசிங்கவினால் 2500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு;ள்ளது.
தனியார் பஸ்களில் தாம் பயணம் செய்யும் போது தமக்கு பயணச் சீட்டு வழங்கப்படுவதில்லை என பயணிகள் சிலர் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்த பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் சம்பந்தப்பட்ட பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டிருந்தார்.
Average Rating