வவுனியாவில் றிசாட் பதியுதீன் – முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மோதல்

Read Time:1 Minute, 30 Second

fight-003வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரது குழுக்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த கபே அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களை தடுத்து அவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முகமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே குறிப்பிட்டுள்ளது.

இந்த மோதலின் போது காயமடைந்த 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது
Next post கிணற்றில் 15 நாட்களாக சிக்கியிருந்த சீனப் பெண் உயிருடன் மீட்பு