சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகத்தில் ஒருவர் கைது
4 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக சிறிய தகப்பன் முறையானவர் யாழ் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழாலை மேற்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் பாடசாலையொன்றில் இரவுக் காவலாளியாகக் கடமையாற்றுபவராகும்.
இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.