விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் தற்கொலை
Read Time:59 Second
பெலியகொடவில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெலியகொட மொத்த விற்பனை மீன் சந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையாற்றி வந்த விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தமக்கு தாமே துப்பாக்கிப் பிரயோகம் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Average Rating