மன்னார் ரெலோ அலுவலகம் மீது தாக்குதல்
மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்திற்குள் இன்றுகாலை புகுந்த சிலர் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன் அங்கிருந்தவர்கள்மீதும் தாக்குதல் நடத்தியதாக அதிரடிக்கு அங்கிருந்து கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன.
இத்தாக்குதலின்போது அங்கிருந்தவர்களுள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தாக்குதலில் ரெலோ அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பெக்ஸ் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை இத்தாக்குதல் கூட்டமைப்பின் ஆதரவர்களாலேயே சில உள் முரண்பாடுகள் காரணமாக நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதுடன், வேட்பாளர் தெரிவில் குளறுபடிகள், விருப்புவாக்கு விடயம், வாக்கெண்ணும் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், வேட்பாளர்கள் தொடர்பில் பக்கச் சார்பான தன்மைகள் என்பனவே இத்தாக்குதலுக்கு காரணமென்றும் தெரியருகின்றது.
Average Rating