வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணம்! -சரத் பொன்சேகா
வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணமாகும். ஜனநாயகத்திற்கு முரணான வகையிலாவது ஆட்சியினைக் கைப்பற்றி நாட்டில் இராணுவ ஆட்சியினை பலப்படுத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரசாங்த்தின் எதிர்ப்புகளைத் தாண்டி எமது இருப்பினை தக்கவைத்துக் கொண்டமையே எனக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். நாட்டின் இரண்டாவது பலம் வாய்ந்த கட்சியாக நாம் மாறுவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தென்பகுதி மக்கள் மத்தியில் இனவாதத்தினைத் தூண்டி நாட்டில் பிரிவினைவாதத்தினை உருவாக்கும் செயற்பாடுகளை அரச தலைமைகளே மேற்கொள்கின்றனர்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்கும் தமிழ் மக்களிடையே பிரிவினையினை தூண்டுவதற்கும் அரசாங்கமே முக்கிய காரணமாகும்.
நாட்டில் பிரிவினை பற்றி பேசுவதற்கோ நாட்டை பிரிப்பது பற்றி கதைப்பதற்கோ அவசியமில்லை. இன்று நாட்டில் மக்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர்.
அதை சீர்குலைக்கும் விதத்தில் அரசாங்கமும் அரச தலைமைகளும் செயற்படுவதானது மோசமானதொரு நிலையை ஏற்படுத்தும்.
Average Rating