பண்டாரவளை வாகன விபத்தில் ஒருவர் பலி
Read Time:1 Minute, 17 Second
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் உடுவரை ஐந்தாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று, வீதியை கடக்க முற்பட்ட பாதசாரதி ஒருவர் மீது மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதியை இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating