மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைதண்டனை
Read Time:49 Second
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று 17 வருட கடூழிய சிறைதண்டனை விதித்துள்ளது.
இதனைத் தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு 50 ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறும் அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னநாயக்க குற்றவாளிக்கு உத்தரவிட்டுள்ளார்.
நட்டஈட்டினை செலுத்தத் தவிறினால் மேலும் ஒன்றரை வருட சிறைதண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
Average Rating