மன்னாரில் இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்!
மன்னார் எருக்கலம்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
முஜீப் முசாபிர் (03) மற்றும் இக்ரம் ஹஸ்மில் (04) ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர்.
ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர். நேற்று முன்தினம் (24) பிற்பகல் விளையாடிக் கொண்டிருந்த மேற்படி இரு சிறுவர்களையும் காணவில்லையென பெற்றோர் தேடிய போது இருவரும் கைவிடப்பட்டிருந்த கிணறு ஒன்றுக்குள் வீழ்ந்து கிடந்துள்ளனர் உடனடியாக அயலவர்களின் உதவியுடன் இருவரையும் மீட்டெடுத்த போது இருவரும் உயிரிழந்து காணப்பட்டனர்.
மன்னார் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரது சடலங்களும் மன்னார் பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அங்கு வைத்திய பரிசோதனை மேற்ெகாள்ளப்பட்ட பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
Average Rating