மட்டக்களப்பில் குரங்குகள் அட்டகாசம்!
Read Time:1 Minute, 21 Second
மட்டக்களப்பு மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.பல கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள், பாடசாலைகள் இதனால் சேதமடைகின்றன.
செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் குரங்குகளின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் கட்டடங்களின் கூரைகளின் மேலேறி குரங்குகள் அட்டகாசம் புரிவதால் ஓடுகள் நொறுங்கி பாடசாலையின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
சில வகுப்பறைகளுக்குள்ளும் குரங்குகள் நுழைந்து வகுப்பறை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.மோகன் தெரிவித்தார்.
குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துமாறு பிரதேச செயலாளர் உட்பட பல அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating