வல்லுறவுக் குற்றத்துக்காக சீன இராணுவ ஜெனரலின் மகனுக்கு 10 வருட சிறை
Read Time:1 Minute, 16 Second
பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு காரணமாக, சீன இராணுவ ஜெனரல் ஒருவரின் மகனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இராணுவப் பாடகரான லீ ஷூவாங்ஜியாங் சீன இராணுவத்தில் ஜெனரல் தரத்தில் உள்ளார். இவரின் 17 வயதான லீ தியான்யியும் மேலும் நால்வரும் கடந்த பெப்ரவரி மாதம் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டை லீ தியான்யி நிராகரித்தார்.
எனினும், அவரைக் குற்றவாளியாகக் கண்ட லீ தியான்ஸிக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
அவரின் சகாக்கள் நால்வருக்கும் 3 முதல் 12 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Average Rating